செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஸ்ரீ காசி விசாலாட்சி



ஸ்ரீ காசி விசாலாட்சி

அன்னமிடும் கைகொண்ட அன்னையான தேவியே
       அகன்றகண் விசாலாட்சி அகிலம்காக்க நின்றாயே
மின்னும் தாமரையில் முக்திதரும் சிவலிங்கமும்
     முழுமுதற் தெய்வமான மோதகப் பிரியனையும்
பின்னிறு கரம்தாங்க பிடித்தமாலை கமண்டலமும்
பொற்கரம் தாங்கிட புவனம் காத்திடவே
  பொன்னிற கங்கைகரையில் புனிதமாய் வீற்றிருப்பாய்
         பணிந்தேன் நின்பாதம்மனப் பக்குவம் தந்தருள்வாயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக