ஸ்ரீ
காசி விசாலாட்சி
அன்னமிடும்
கைகொண்ட அன்னையான தேவியே
அகன்றகண் விசாலாட்சி அகிலம்காக்க நின்றாயே
மின்னும்
தாமரையில் முக்திதரும் சிவலிங்கமும்
முழுமுதற் தெய்வமான மோதகப் பிரியனையும்
பின்னிறு
கரம்தாங்க பிடித்தமாலை கமண்டலமும்
பொற்கரம்
தாங்கிட புவனம் காத்திடவே
பொன்னிற கங்கைகரையில் புனிதமாய் வீற்றிருப்பாய்
பணிந்தேன் நின்பாதம்மனப் பக்குவம் தந்தருள்வாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக