திருமகளே!
லட்சுமியே!
அலைகடல்
மீதுதித்த அழகின் சுடரே
கலைமதி சந்திரனின் கண்நின்ற சோதரியே
விலையிலா அமுதமுடன் விளைந்திட்ட சுவையே
நிலையான செல்வமதை நாளுந்தரும் செல்வியே
செந்தாமரையில் வீற்றிருக்கும்
செல்வத்தின் அதிபதியே
சிந்தாமணியே பொற்காசு சொரிகின்ற
செங்கரமே
தந்தக் கரங்களில் தாமரை மலர்ஏந்தி
மந்தகாசம் புரிகின்ற மந்தாகினி
வந்தருளே!
மன்னர்தம் மகுடத்தில் மகுடலக்ஷமி ஆகிடுவாய்
முன்னவன் திருமார்பில் மகிழ்ந்தே வீற்றிருப்பாய்
என்னேரமும் உந்தனையே என்னுள்ளே வைத்திடுவேன்
புன்னகையுடன் கடைக்கண பார்வை தந்தருளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக