சக்குளத்துகாவு
பகவதியே!
எட்டுக்
கைகளில் எடுத்திட்ட ஆயுதங்கள்
எழில் சக்கரம் எடுத்தூதும் சங்கம்
வெட்டும் அரிவாள் வீரியமுடன் சூலம்
வில்லும்
அம்பும் வெலும் திரிசூலமும்
பட்டென
விளங்கும் பளிங்கான அபயகரம்
பழமான எலுமிச்சை பாவையின் திருமாலை
பொட்டுடன் நெற்றிக்கண் பொலிகின்ற தோற்றம்
பூமியில் பக்தர்கள் போற்றுகின்ற புதுவடிவம்
கோட்டயம் சக்குளத்து காவுதனில் எழுந்தருளும்
கோமகளே பகவதியே காலடியில் பணிவேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக