செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஆடிப் பூரத்து அழகிய பூவே



ஆடிப் பூரத்து அழகிய பூவே!

பூவனம் தன்னில் புனிததுளசி செடியருகில்
    பூவாகி நீவந்தாய் பெரியாழ்வார் மகளானாய்
பூமாலை சூட்டியே பூவையே நீமகிழ்ந்தாய்
     பாமாலை கேட்டே பரந்தாமன் கைபிடித்தான்
       பூவையரோடு நோன்பிருந்து பூரத்தில் பிறந்தவளே
    பூலோக நாயகனை புவியில் தானடைந்தாய்
    பூவிழிகள் கண்டநின் புதுக்கனவை வண்ணமாய்
            பூமகளே வாரணமாயிரமாய் பண்போடு அருளினாயே!

ஆன்மிக மலர்                அட்டை பட கவிதை
30.7.16                                              ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக