மே தினம்
1. கல்லிலும் முள்ளிலும் கதிர்புகா கானிலும்
கடுகிஏறும் மலையிலும் கடினப் பாறையிலும்
அல்லும் பகலும் அலை ஒயா கடலடியினிலும்
அசையும் காற்றைக் கடந்து அண்ட வெளியிலும்
வெல்லும் கைகள் வழிப்போடு பணிசெய்யும்
வாட்டும் குளிரிலும் வரைமுகட்டில் காத்திருக்கும்
வில்லாக வளைந்தும் வேர்வை சிந்தியும்
விவாதம் பேதம் மதம் வேலிகள் கடந்தும்.
2. கைகளில் எடுத்து கனமிகு ஆயுதங்களில்
கருவாகிப் பிறந்திடும் கனரக பொருட்கள்
கைகளில் அடங்கும் குண்டூசி முதல்
கடல் கடந்து தாக்கும் கைவண்ண ஊர்திகள்
கைகளில் மாலை கட்டி கடவுளை ஏற்றிடும்
காலைமுதல் மாலைவரை கணநேர ஒய்வின்றி
கைகளை உயர்த்திடும் கனவின் நாயகர்களே
கைகூப்பும் வாழ்த்துக்கள் கவின்மிகு மேதினத்தில்
ராதாகவி
கோவை
1. கல்லிலும் முள்ளிலும் கதிர்புகா கானிலும்
கடுகிஏறும் மலையிலும் கடினப் பாறையிலும்
அல்லும் பகலும் அலை ஒயா கடலடியினிலும்
அசையும் காற்றைக் கடந்து அண்ட வெளியிலும்
வெல்லும் கைகள் வழிப்போடு பணிசெய்யும்
வாட்டும் குளிரிலும் வரைமுகட்டில் காத்திருக்கும்
வில்லாக வளைந்தும் வேர்வை சிந்தியும்
விவாதம் பேதம் மதம் வேலிகள் கடந்தும்.
2. கைகளில் எடுத்து கனமிகு ஆயுதங்களில்
கருவாகிப் பிறந்திடும் கனரக பொருட்கள்
கைகளில் அடங்கும் குண்டூசி முதல்
கடல் கடந்து தாக்கும் கைவண்ண ஊர்திகள்
கைகளில் மாலை கட்டி கடவுளை ஏற்றிடும்
காலைமுதல் மாலைவரை கணநேர ஒய்வின்றி
கைகளை உயர்த்திடும் கனவின் நாயகர்களே
கைகூப்பும் வாழ்த்துக்கள் கவின்மிகு மேதினத்தில்
ராதாகவி
கோவை