திங்கள், 15 ஜனவரி, 2018

வாராத மழையாக

17. வாராத மழையாக

வாராத மழையாக வந்துவந்து குளிர்வித்தாய்
      வாழ்வின் இறுதியில் நல்லமைதி தாராயோ?
                  காராம் பசுபோல் கருணை காட்டுவாயோ?
       கணமும் மனமதை கலங்காது வைப்பாயோ?
                  நீராகக் கண்ணீர் நீண்டுவழியே துடிப்புகள்
           நினைக்காத போதும் நிணைவில் வரும் தனிமை
                  வேராக நீயிருந்து வேதனை தனைநீக்கி
         வாழ்வின் இறுதியில் வெறுமை தவிர்ப்பாயோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக