திங்கள், 15 ஜனவரி, 2018

ஆனந்தம் எங்கென்று...

10. ஆனந்தம் எங்கென்று...

ஆனந்தம் எங்கென்று அமர்ந்த சபரிதனில்
         அற்புதமாய் காட்டி அரியதரிசனமும் தந்தாய்
        ஈனப்பிறவி எந்தனையும் ஈன்றெடுத்த தாய்போல்
                 ஈடில்லா சந்நிதானம் இமைதிறந்து காண வைத்தாய்
        கோனாகி வந்தவனே கோவில் குடிகொண்டவனே
             கோஷத்தின் கீதத்தில் குதூகலித்து மகிழ்பவனே
      தானாக வாரேன்என தனிமையைத் தந்துவிட்டு
             தயைவாக உன்னிரு தாள்பற்றி நிற்க வைத்தாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக