திங்கள், 15 ஜனவரி, 2018

தவிர்க்க முடியாத...

18. தவிர்க்க முடியாத...

தவிர்க்க முடியாத தினமும்வலி தொடரும்
     தாங்கும் சக்தியின்றி தானேவிழும் கண்ணீர்
                   தவிக்க வைத்து துயர்பட வைக்கின்றாய்
தங்கி உதவிட தளமில்லா கட்டிடமாய்
                   புவியில் எழுப்பி பரிதவிக்க விடுகின்றாய்
        பிறந்தபணி முடிந்திட பக்கம்வந்து காப்பாயோ?
   கவிதையில் புலம்பி கண்ணீர்விட வைப்பாயோ
      கலியுக வரதனே கணத்தில் ஆட்கொள்வாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக