திங்கள், 15 ஜனவரி, 2018

கணபதிதுணை

1. காப்பு
கணபதிதுணை

தம்பிக்கு துணையாக தும்பிக்கை கணபதியே
           தகைவான கன்னிமூலமதில் தவமாகி அமர்ந்தவனே
    தம்பியான சபரிநாதனை தரிசிக்க கார்த்திகையில்
       துளசிமணி மாலைகள் தாமணிந்து விரதமேற்று
  நம்பிக்கை துணையாக நல் இருமுடி தாங்கியே
   நாடுகாடு கடந்து நாளெல்லாம் சரணம்கூவி
                 இம்மைக்கும் மறுமைக்கும் இன்துணையாகும் ஹரிஹரசுதனை
                 இதயத்தில் வைத்து இனியகவிமாலையாக்க அருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக