திங்கள், 15 ஜனவரி, 2018

ஆழ்வான்

4. ஆழ்வான்

ஆழ்வான் என்னுள்ளே ஆன்மீகம் வளர்ப்பான்
      அகில உலகும் அவனுள்ளே அடக்கம் என்பான்
சூழ்கடல் உலகினில் சுழலும் ஐம் பூதங்களில்
        சின்னஞ்சிறு அணுவாகி சுடரொளி எழுப்பிடுவான்
        தாழ்வென்றும் உயர்வென்றும் தகுதியென ஏதுமில்லை
               தரணியில் எழுகின்ற தனிஉயிரும் யாவும் சமமென்பான்
    பாழ்பட்ட மனதுள்ளே விருப்புவெறுப்பு தனைநீக்கி
           பாசமிகு அன்பையே புது அமுதமென ஊட்டிடுவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக