14. செய்தாய்!
செய்தாய் உடனிருந்து சபரிபீடம் தானேறிவர
செய்வித்தாய் மகரசோதி சேவையும் தந்து விட்டாய்
பெய்யும் மழையிலும் பல்வேறு பருவத்திலும்
பிழையாமல் உனைநாட பெரும்பேறு அளித்தாய்
செய்யும் கடமைகள் சீராக முடிக்க உடனிருந்து
செவிசாய்த்து என்வேண்டுதலை சிறப்புடன் முடித்து வைப்பாய்
தெய்வமே நீஎந்தன் தோழனே என்வலிநீக்கி
துவளும் மனஉடல்வலி துடைத்து காப்பாயே!
செய்தாய் உடனிருந்து சபரிபீடம் தானேறிவர
செய்வித்தாய் மகரசோதி சேவையும் தந்து விட்டாய்
பெய்யும் மழையிலும் பல்வேறு பருவத்திலும்
பிழையாமல் உனைநாட பெரும்பேறு அளித்தாய்
செய்யும் கடமைகள் சீராக முடிக்க உடனிருந்து
செவிசாய்த்து என்வேண்டுதலை சிறப்புடன் முடித்து வைப்பாய்
தெய்வமே நீஎந்தன் தோழனே என்வலிநீக்கி
துவளும் மனஉடல்வலி துடைத்து காப்பாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக