திங்கள், 15 ஜனவரி, 2018

கறந்தபால்

7. கறந்தபால்!

கறந்தபால் மடியேறாது கனவுகளும் தொடராது
கடமை முடித்தற்கு காலமெலாம் நன்றியோ
மறந்தேன் மனதில் மறைத்தேன் எண்ணங்களை செயலை
மாயைஎன உணர்ந்தேன் மாநிலத்தின் காலவரைகள்
துறந்தேன் வந்தது துணையாக தனிமையின் இனிமை
தூயவன் திருவடி துலங்கியது கண்முன்னே
பிறவாத வரமருள பிறந்தவந்த சோதியென
பாசமுடன் கைபற்றி பதினெட்டுபடி ஏற்றிவிட்டாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக