திங்கள், 15 ஜனவரி, 2018

ஆட்கொள்ள...

19. ஆட்கொள்ள...

ஆட்கொள்ள வருவாயே ஆனந்த சித்தனே
          ஆழ்மனதில் புகுந்தே அமைதியைத் தருவாயோ
             ஒட்டுவாயோ என்நோயை ஒப்பிலா வலிமை தருவாயோ
        ஒரத்தில் வந்துவிட்டேன் ஒளிதர வாராயோ
சிட்டுக் குருவியாய் சிறகடித்து பறந்துவிட
     சேர்ந்த என்முன் செல்வனே வருவாயே
   பட்டென ஆன்மாவை பாதத்தில் சேர்த்துவிடு
              பிறவியின் பயன்முடிய பற்றுநீக்கி அருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக