13. எந்நாளும் திருநாளாய்!
எந்நாளும் திருநாளாய் எழில்பெருகும் சபரிமலையில்
எழுந்தருளும் சாஸ்தாவே என்றோ சரண்டைந்தேன்
இந்நாள்வரை சோதனையே இன்னும் பொறுப்பேனா?
இயலாமை தள்ளாமை இனிதொடரும் முதுமை
முந்நாளின் வினைப்பயன் முன்வரும் என அறிந்தேன்
முப்பிறவி பாவங்கள் முற்றிலும் தீர்ப்பாயா?
முந்தும் நோய்நீக்கி முழுமையான உடல்நலம்
முன்னளித்து மகிழ்வோடு முக்திபெறச்செய்வாயே!
எந்நாளும் திருநாளாய் எழில்பெருகும் சபரிமலையில்
எழுந்தருளும் சாஸ்தாவே என்றோ சரண்டைந்தேன்
இந்நாள்வரை சோதனையே இன்னும் பொறுப்பேனா?
இயலாமை தள்ளாமை இனிதொடரும் முதுமை
முந்நாளின் வினைப்பயன் முன்வரும் என அறிந்தேன்
முப்பிறவி பாவங்கள் முற்றிலும் தீர்ப்பாயா?
முந்தும் நோய்நீக்கி முழுமையான உடல்நலம்
முன்னளித்து மகிழ்வோடு முக்திபெறச்செய்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக