திங்கள், 15 ஜனவரி, 2018

மாற்று வழியில்லை

3. மாற்று வழியில்லை

மாற்று வழியில்லை மார்க்கம் ஏதுமில்லை
     மன்னவனே உன்திருவடி மனதில் ஏற்றினாய்
    ஏற்றமிகு பாதையினை என்னுள்ளே காட்டினாய்
            எங்கெங்கோ அலைபாய்ந்த எண்ணத்தை நிறுத்தினாய்
        பற்றுபாசம் என்பதெலாம் பொற்றாமரை இலை நீராக
         பரிவாக எடுத்துரைத்து பாசமுடன் எனை ஏற்றாய்
   கொற்றவனே ஐயப்பா குணவானே சாஸ்தாவே
         கோஷம் எழுப்பினால் குளிர்ந்தென்னை ஆள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக