திங்கள், 15 ஜனவரி, 2018

வைத்தாய்!

11. வைத்தாய்!

வைத்தாய் பலபணிகள் வையத்தில் நான்செய்ய
        வாழ்நாளின் இன்பங்கள் வளமாரத் தந்து விட்டாய்
துவைத்த துணிபோல தூய்மையில் மனம்கரைய
துன்பமும் இன்பமும் தொடர்ந்து தந்தாய்
சுவைத்த அனுபவங்கள் சிறிதும் சொந்தமில்லை
 சுகமான ஏதும் சுகமாகத் தொடர்வதில்லை
 அவையில் அவனின்றி அணுவும் அசைவதில்லை
         அழகான தத்துவத்தை அமைதியாக உணர்வித்தாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக