திங்கள், 15 ஜனவரி, 2018

காப்பதும் கண்முன்

15. காப்பதும் கண்முன்

காப்பதும் கண்முன் காட்சி தருவதும்
                   கணத்தில் கனவுகளை கண்ணிலிருந்து விலக்குவதும்
                   எப்போதும் என்முன் எழில்விளையாட்டை நிகழ்த்துவதும்
                  எங்கும் என் மனவேதனைகள் எளிதாக அறிந்தாலும்
         தப்பாது விலகிநின்று தவிக்கவிட்டு பார்ப்பதும்
                துயரில் உடல்வேதனையில் துடித்திட வைப்பதும்
     ஒப்பிலா முதல்வனே ஒடிவந்து காப்பாயே
                ஒளிரும் மகரசோதி உன்னையன்றி யார் அறிவார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக