21. முடிப்பு
ஏற்றிட உன்னையன்றி!
ஏற்றிட உன்னையன்றி எனக்கோர் துணையில்லை
எந்தன் கோரிக்கை எளிதாக முடித்திடுவாய்
பற்றுநீக்கி பூதநாதா பாசமுடன் ஏற்றிடுவாய்
பவனியில் வாழ்வினை பழுதின்றி முடித்துவிட்டேன்
குற்ற உணர்வில்லை குறையேதும் இல்லை
குறுகுறுக்கும் உள்மன உடல்வலி குறுகிட நீக்கி
சற்றும் தாமதமின்றி சன்னிதானம் அழைத்தேக
சடுதியில் வந்திடுக சபரிமலை ஐயப்பா!
பெங்களுர் "ராதாகவி"
30.11.17 கோவை
ஏற்றிட உன்னையன்றி!
ஏற்றிட உன்னையன்றி எனக்கோர் துணையில்லை
எந்தன் கோரிக்கை எளிதாக முடித்திடுவாய்
பற்றுநீக்கி பூதநாதா பாசமுடன் ஏற்றிடுவாய்
பவனியில் வாழ்வினை பழுதின்றி முடித்துவிட்டேன்
குற்ற உணர்வில்லை குறையேதும் இல்லை
குறுகுறுக்கும் உள்மன உடல்வலி குறுகிட நீக்கி
சற்றும் தாமதமின்றி சன்னிதானம் அழைத்தேக
சடுதியில் வந்திடுக சபரிமலை ஐயப்பா!
பெங்களுர் "ராதாகவி"
30.11.17 கோவை