வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

பால கிருஷ்ணன்


கொண்டையின் மயிலிறகோ குழல் அழகோ
   குமிழ் சிரிப்போ குவிந்திடும் செம்பவளவாயோ
குண்டலம் குதித்தாடும் இருசெவியோ
   குறும்போடு பளபளக்கும் வண்டுவிழியோ
கொண்டல் வண்ணமோ குவளை மூக்கோ
   கைகளில் தவழ்கின்ற புல்லாங் குழலோ
அண்டமெலாம் மயங்க வைக்கும் மாயம்

   அழகா உன்னிடம் எதிலோ நானறியேனே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக