செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

கருணை தெய்வம்


ஒயாது அழித்தலை ஒய்விலாது செய்தனையோ
    ஒய்வெடுக்க தோல்மீது ஒம்காரத்தில் அமர்ந்தனையோ
மாயாத துயரங்கள் மாந்தருக்கு மாய்ந்திட
    மலராசனமிட்டு மாதவம் செய்தனையோ
காயாத எனக்கருள கல்லுக்குள் ஈரமாகி
    கால்தூக்கி நடனமாடிய கனகசபை நீத்தனையோ
சாயாத என் உடலினை சகத்தின் மண்ணுக்கும்

    சாகாத என் ஆன்மாவைநின் செவ்வடியிலும் சேர்ப்பாயோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக