செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஒம் நமச் சிவாயா


நமச் சிவாயமென நாவினில் இனிக்கும்
    நந்திமீது நாயகன் நற்குடும்பம் தோன்றும்
உமா சிவசிங்கரி உடனுறை தாயாவாள்
    உலகமகா மூலவன் உள்ளமர்ந்த கணபதி
சமர் புரியும் சண்முகன் சோதர்கள்
    சந்தியிலும் குன்றிலும் சன்னதி காண்பவர்
அமரத்துவம் அடையவே ஆதிசிவ குடும்பமதை

    அழகிய சிவரத்திரியில் அகமகிழ்ந்து பணிவோமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக