புதன், 25 பிப்ரவரி, 2015

ஸ்ரீ ஆஞ்சநேயா



தஞ்சமென வந்தவனை தம்பியெனத் தழுவி
   தன்னெஞ்சில் வைத்து அருளிய காகுத்தனை
நெஞ்சில் நிறுத்தி நானிலத்தில் என்றும்
   நிலைபெற்று சிரஞ்சீவியாய் நிறைந்திருக்கும் அனுமனே
சஞ்சீவி பருவதத்தை சட்டெனத் தூக்கிவந்து
   சகோதரன் உயிர்மீட்ட சொல்லின் செல்வனே
அஞ்சா நெஞ்சமும் அறிவோடு ஆற்றலும்
   அன்போடு தூய்மையும் அருவியென நாவண்மையும்
எஞ்ஞான்றும் எமக்களிப்பாய் ஈடில்லா ஆஞ்சநேயா

   என்றென்றும் உனதடியே போற்றிப் பணிவேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக