திங்கள், 16 பிப்ரவரி, 2015

நாணா நினைவு


பல்லவி
உன்னை நினையாத நாளில்லையே நீசெய்த
    பணிகளுக்கு ஒர் எல்லை இல்லையே (உன்னை)

அனுபல்லவி
நாணாவாகி தானாகி தன்னலமறியா மனமாகி
           தாயாகி வாழ்ந்திருந்த தவமே - எங்கள் வரமே (உன்னை)

சரணம்
    நினைவறிந்த நாள்முதல் நிழலாகி தொடர்ந்திருந்தாய்
   கணமேனும் எமைப்பிரியாது காவலாகி காத்திருந்தாய்
   வான் அமுதாகி யாம்வளர அன்பை பொழிந்திருந்தாய்
              பொன் மலராகி வானுலகு பொலிந்திட சென்றுவிட்டாய் (உன்னை)


                            ராதாகவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக