பல்லவி
உன்னை
நினையாத நாளில்லையே நீசெய்த
பணிகளுக்கு ஒர் எல்லை இல்லையே (உன்னை)
அனுபல்லவி
நாணாவாகி தானாகி தன்னலமறியா மனமாகி
தாயாகி வாழ்ந்திருந்த தவமே - எங்கள் வரமே
(உன்னை)
சரணம்
நினைவறிந்த நாள்முதல் நிழலாகி தொடர்ந்திருந்தாய்
கணமேனும் எமைப்பிரியாது காவலாகி காத்திருந்தாய்
வான் அமுதாகி யாம்வளர அன்பை பொழிந்திருந்தாய்
பொன் மலராகி வானுலகு பொலிந்திட சென்றுவிட்டாய்
(உன்னை)
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக