1. காதல் பிறப்பது கண்காணாத
கருவறையில்
காலமெலாம் வளர்வது கருணைமிகு அன்னை மடியில்
காதல் தொடர்வது கனிகின்ற உடன்பிறப்பில்
காலமெலாம் போற்றும் கனவுமிகு தந்தைதோளில்
காதல் தோன்றுவது கன்னியர் கடைக்கண்ணில்
காலமெலாம் தொடரும் கல்யாணம் ஆனாலே
காதல் வாழ்கவென குரல் எழுப்பும் இளமையே
காதலை அறிமுகம் காட்டிய பெற்றோரை
2. காதலை பாசத்துடன் கொண்டாடும்
உறவுகளை
காதலில் கட்டுண்ட கவின்மிகு நண்பர்களை
காதலர் தினத்தில் கருத்தினில் கொள்வீர்
காதல் என்பது கனரமீறும் அன்புவெள்ளம்
காதலின் மறுவடிவம் அன்பே அறிந்திடுவீர்
கரைகின்ற அன்பால் ககனத்தை வெல்லுவீர்
காதலின் வெற்றி கைகளில் தவழும்
கரும்சிவப்பு ரோஜாவாக காலமெலாம் மணக்கும்!
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக