ஆதி
குருவாய் குருந்தமரம் அடி அமர்ந்த குருவே
ஆறுமுகன் குருவாக அடிபணிந்த குருவே
வேதியர்கள்
ஒதுகின்ற வேதத்தின் உருவே
விளைகின்ற அறிவெலாம் விளக்கிடும் குருவே
சோதியும்
உடுக்கையும் சுவடியும் அபயமும்
சேர்ந்திடும் நான்கையும் செங்கைகள் ஏந்திட
மோதிவரும்
கங்கையுடன் மூன்றாம்பிறை சூடியே
மோனத்தவ தக்ஷிணா மூர்த்தியே வந்தருள்க!
ராதாகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக