1. மாடியிலே தோட்டம் உம் மனதில் எழுந்ததிட்டம்
மூன்றாவது அறுவடை மாதுஎன் வீட்டுமாடியில்
கோடியிலே ஒருவர்நீவீர் கோடிப்பேரை வாழவைப்பீர்
குவித்திடும் வாய்ப்புகள் குவிந்திடும் பலன்கள்
நாடி ஏழை துயர்தனை நசித்திடுவீர் நொடியினில்
நாளும் தவமிருப்பீர் நானிலம் நன்குவாழ
வாடிடும் உம்முகம் வறுமையைக் கண்டாலே
வாழ்வளிக்க திட்டங்கள் வகைவகையாய் தானளித்தீர்
2. பாடிநான் புகழவில்லை பலன் எதும் கேட்கவில்லை
பாரினில் இன்னும்நீவீர் பல்லாண்டு வாழ்கவென
தேடிநின்று இறைவனை தினமும் வேண்டிடுவேன்
தென்றலென ஒளியென தேயாத நிலவென வாழ்க
கூடிநின்று வாழ்த்துவோம் குதூகலித்து வணங்குவோம்
குளிர்விக்கும் அறுபத்துஏழு குறைவிலா அன்னையே
செடிவளர மண்வேண்டும் செல்விநீவிர் வாழ்ந்திட
சோர்விலா எம்மனமுண்டு சோதியென வாழ்க! வாழ்க!
கவிதை. ராதாகவி
தட்டச்சு, புகைப்படம் சித்தார்த்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக