செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

உலகமகா சோதி


விரிகுழல் விரிந்திருக்க விழியிரண்டு பார்த்திருக்க
   வெறுமையான என்நெஞ்சில் வேரூன்றும் உன்கருணை
பரிதவித்து மனம்நிற்க பாசத்துடன் உட்புகுந்தாய்
     பாரினில் என்குறைகள் பனியாக உருகவைத்தாய்
தரித்திடும் காவியுடை தளர்ந்துவரும் மென்னடை
     தாயாகி நீவந்தாய தவழ்சேயாக நானிருந்தேன்
உரிமையுடன் எந்தனையே உன்னுள்ளே வைத்திட்டேன்
     உலகமகா சோதியே உந்தனையே சரணடைந்தேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக