விரிகுழல் விரிந்திருக்க விழியிரண்டு பார்த்திருக்க
வெறுமையான என்நெஞ்சில் வேரூன்றும் உன்கருணை
பரிதவித்து மனம்நிற்க பாசத்துடன் உட்புகுந்தாய்
பாரினில் என்குறைகள் பனியாக உருகவைத்தாய்
தரித்திடும் காவியுடை தளர்ந்துவரும் மென்னடை
தாயாகி நீவந்தாய தவழ்சேயாக நானிருந்தேன்
உரிமையுடன் எந்தனையே உன்னுள்ளே வைத்திட்டேன்
உலகமகா சோதியே உந்தனையே சரணடைந்தேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக