வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

குருவாயூரப்பன்


குழந்தை வடிவாகி கோலமிகு மலர்மாலை
      கமலமும் கதையும்  இருகைகளில் ஏந்தி
முழங்கும் சங்கமும் மின்னும் சுதர்சனமும் கைகூட
      மேகமான குழல் கொண்டையில் மயில் இறகாட
அழகான தீபச்சரம் ஆடிநின்று ஒளிவீச
      அலங்கரிக்கும் பட்டும் அணிந்துள்ள அணிகலனும் மின்னும்
மழலை மொழியானை மாதவத் திருமகனை

      மங்கல குருவாயூரில் மனங்குளிரக் கண்டேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக