வயலெல்லாம் நெல்விளையும் வளமான தென்மதுரை
வண்ணமிகு கோபுரங்கள் வானளாவி வரவேற்கும்
கயல்எனத் துள்ளும் கண்விழியாள் மீனாட்சி
கையில் கிளியேந்தி காட்சிதரும் கூடல்நகர்
மையல்கொண்ட சுந்தரேசன் மணமகன் திருக்கோலம்
மாடவீதிப் பாதைகளில் மனமகிழ் தேரோட்டம்
தையல்அவள் பச்சைவண்ணத் தாயாகி நிற்கின்றாள்
தஞ்சமென வந்தவரை தன்சேயாக்கி காக்கின்றாள்!