வெள்ளி, 27 மார்ச், 2015

ஹரிஹர புத்திரன்



சரணமென உன்திருவடி தேடி வந்தவர்க்கு
  சுனையாகி விரும்பிய வரம் தருபவனே
கரையிலா கருணைக் கடலாகி வந்தவனே
  காசினியில் ஒளிவீசும் குளிர் நிலவே
மறை போற்றும் ஹரிஹர புத்திரனே
  மூவுலகு ஏற்கும் தலைவனான சாஸ்தாவே
நிறைவாக நெஞ்சமதில் தினமும் போற்றுகிறேன்

  நீக்கிடும் எல்லாத் துயர்களையும் நின்னருளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக