திருமாலும் பிரமனும் தேடியும் காணாத
திருமுடியும் அடியும் கொண்ட சிவமே
உருவமும் அருவமும் உள்ளடக்கிய லிங்கமே
உடுக்கை ஒலியிலாடும் ஊர்த்தவ தாண்டவமே
அருவமும் கங்கையும் செயும் அபிஷேகப் பிரியனே
ஆவுடை மீதிருந்து அகிலம்காக்கும் ஈஸ்வரனே
திருநீரும் சந்தணமும் திகழ்கின்ற பரமனே
திருநீல கண்டனே திருவருள் புரிவாயே!
ஒருஐந்து எழுத்தினை ஒம்நமச்சிவாயவென
ஒருபோதும் மறவாது ஒதிநிற்க அருள்வாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக