ஞாயிறு, 29 மார்ச், 2015

மதுரை மீனாட்சி



வயலெல்லாம் நெல்விளையும் வளமான தென்மதுரை
  வண்ணமிகு கோபுரங்கள் வானளாவி வரவேற்கும்
கயல்எனத் துள்ளும் கண்விழியாள் மீனாட்சி
  கையில் கிளியேந்தி காட்சிதரும் கூடல்நகர்
மையல்கொண்ட சுந்தரேசன் மணமகன் திருக்கோலம்
  மாடவீதிப் பாதைகளில் மனமகிழ் தேரோட்டம்
தையல்அவள் பச்சைவண்ணத் தாயாகி நிற்கின்றாள்
  தஞ்சமென வந்தவரை தன்சேயாக்கி காக்கின்றாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக