ஞாயிறு, 22 மார்ச், 2015

சமயபுரத்து நாயகியே!



எட்டுக் கரங்களில் ஏந்திய ஆயுதங்கள்
  எழிலான நாகம் எதிர்கொள்ளும் மகுடம்
சுட்டுவிடும் நெருப்பு சூழ்கின்ற பின்ணணி
  சுற்றிய பட்டாடை சோதியென ஜொலிக்க
திட்டமுடன் மடித்தபாதம் தொங்கும் மறுபாதம்
  தெய்வீக எலுமிச்சை துவளும் மாலையாக
பொட்டான குங்குமமும் புனிதத் திருநீரும்
  பொலிகின்ற திருமுகமும் புன்னகையும் தவழ்ந்திட
முட்டும் கோபுரம் முன்வரும் சமயபுரம்

  மங்கல நாயகியே மனமிரங்கி அருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக