பால் வடியும் முகமோடு பாலகியாய்
பாவங்கள் போக்கிடும் தேவியாய்
சேல் விழிகள் சிங்காரப் புன்னகைபுரிய
சங்கோடு சக்கரமும் சிறுகை ஏந்த
வெல்லும் வழியே இங்கே சரணடையென
வலக்கை வழிகாட்ட இடக்கை அருள்புரிய
செல்வியாய் வீற்றிருக்கும் சோட்டாணிக்கரை பகவதியே
சொல்வேன் என்றும் அம்மே நாராயணி
தேவி நாராயணி என்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக