வியாழன், 19 மார்ச், 2015

சோட்டாணிக்கரை பகவதி



பால் வடியும் முகமோடு பாலகியாய்
  பாவங்கள் போக்கிடும் தேவியாய்
சேல் விழிகள் சிங்காரப் புன்னகைபுரிய
  சங்கோடு சக்கரமும் சிறுகை ஏந்த
வெல்லும் வழியே இங்கே சரணடையென
  வலக்கை வழிகாட்ட இடக்கை அருள்புரிய
செல்வியாய் வீற்றிருக்கும் சோட்டாணிக்கரை பகவதியே
  சொல்வேன் என்றும் அம்மே நாராயணி
                       தேவி நாராயணி என்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக