வெள்ளி, 27 மார்ச், 2015

விநாயகர்



தம்பியவன் மயிலேறி தரணியெலாம் சுற்றிவர
  தாய்தந்தையை சுற்றிவந்து தாளடியில் பணிந்துநின்று
மாம்பழம் தனைப்பெற்ற மோதகப் பிரியோனே
  மரத்தடியே கோயிலாக்கி மலையானை முகமெடுத்து
நம்பிக்கை எமக்களிக்கும் நல்தும்பிக்கை நாயகனே
  நால்வேதப் பொருளோனே நல்மஞ்சளிலும் உருவெடுப்பவனே
அம்பிகை பாலகனே அவல்பொரி படைத்திட்டோம்
  அறிவொளி பெருக்கியே ஆட்கொள்ள வருவாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக