வெள்ளி, 27 மார்ச், 2015

நீலமயிலோனே!



நீலமயில் வாகனமாய் நீஎறி வலம்வருவாய்
  நால்வேதம் போற்றும் நாயகனே மெய்ப்பொருளே
நீலகண்டன் குமாரனே நல்தேவாதி தேவனே
  நீங்காது பக்தர் நெஞ்சினில் வாழ்பவனே
கோலஎழில் வடிவான கோவே அழகனே
  காலமெலாம் உலகினை காத்திடும் கருணையே
மூலமே கண்கண்ட முதல் தெய்வமே
  முன்வந்து அடியார் முழுத்துன்பம் முடிப்பவனே
சீலனேயான் வேண்டும் சீர்வரம்தரும் வேலனே

  சிவகுரு நாதனே சிரம்தாழ்த்தி போற்றுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக