காகம் தேர்இழுக்க கையிலம்பு வில்லிருக்க
கருநீல கண்டன்பின் ககனமதில் ஈஸ்வரனாகி
நாகமோடு நவக்கிரக நாயகரில் ஒருவராகி
நற்சோதி ஆதித்யன் நல்சாயா மகனாகி
வேகம் தவிர்த்து விண்வெளியில் சுற்றிவந்து
வேற்றுமை இன்றியே வேந்தன்முதல் ஆண்டிவரை
இகத்தினில் பற்றியே இன்பமும் துன்பமும்
இம்மியும் பிசகாது இயக்கிடும் மந்தகனே
அகத்தில் தூய்மையும் அகலோடு எள்ளும்
அன்போடு ஏற்றினோம் ஆழ்நீலப் பூச்சுட்டி
தகர்த்திடு துன்பமதை தயையோடு காத்திடு
தாங்கிட இயலாது தயாளனே உன்பார்வை
நிகரிலா தெய்வமே நானிலமதில் உன்போல்
நல்லவை கொடுப்பாரும் கெடுப்பாரும் இல்லை
பகலவன் மைந்தனே பற்றி நீ வரும்வேளை
பாசமுடன் காத்திட பக்தியுடன் வேண்டுகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக