திங்கள், 16 மார்ச், 2015

ஸ்ரீ சனீஸ்வர பகவான்



காகம் தேர்இழுக்க கையிலம்பு வில்லிருக்க
  கருநீல கண்டன்பின் ககனமதில் ஈஸ்வரனாகி
நாகமோடு நவக்கிரக நாயகரில் ஒருவராகி
  நற்சோதி ஆதித்யன் நல்சாயா மகனாகி
வேகம் தவிர்த்து விண்வெளியில் சுற்றிவந்து
  வேற்றுமை இன்றியே வேந்தன்முதல் ஆண்டிவரை
இகத்தினில் பற்றியே இன்பமும் துன்பமும்
  இம்மியும் பிசகாது இயக்கிடும் மந்தகனே

அகத்தில் தூய்மையும் அகலோடு எள்ளும்
  அன்போடு ஏற்றினோம் ஆழ்நீலப் பூச்சுட்டி
தகர்த்திடு துன்பமதை தயையோடு காத்திடு
  தாங்கிட இயலாது தயாளனே உன்பார்வை
நிகரிலா தெய்வமே நானிலமதில் உன்போல்
  நல்லவை கொடுப்பாரும் கெடுப்பாரும் இல்லை
பகலவன் மைந்தனே பற்றி நீ வரும்வேளை
  பாசமுடன் காத்திட பக்தியுடன் வேண்டுகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக