தொடுத்திட்ட பூமாலை தானணிந்து பின்
துளபமாலை தவழும் தூயவன் தோளுக்கென
எடுத்தளித்த பைங்கிளியே எழில் கோதாய்
எடுத்த பிறவியும் வாய்மடுத்த வேய்குழலோனுக்கென
கடுத்த குளிரில் நோன்புகொண்டு கவி படைத்தாய்
கண்ணன் தனை நினைந்தே கனவுகண்டாய்
படுத்திருந்த அரங்கன் பாவையுன் கரம்பற்ற
பக்தியின் வெற்றியை பாரினில் கண்டோமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக