வியாழன், 19 மார்ச், 2015

விண்ணில் கண்ட ஒளி



மேரியாகி வந்து மகவினை சுமந்த
  மென்மைமிகு அன்னையே மாதவ மங்கையே
புரியாத துயரில் பாதைதனை அறியாது
  பரிதவித்த மானிடரை பாசமுடன் கைபிடித்து
பரிவோடு வழிநடத்தும் பாலகனைத் தந்திட்டாய்
  பாவங்களை தான்சுமந்த புனிதனை பெற்றவளே
விரிகின்ற வான்சுடர் வியக்கும் ஏசுஒளி
  விண்ணில் கண்டோம் வேதனைகள் இனிஇல்லையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக