மேரியாகி வந்து மகவினை சுமந்த
மென்மைமிகு அன்னையே மாதவ மங்கையே
புரியாத துயரில் பாதைதனை அறியாது
பரிதவித்த மானிடரை பாசமுடன் கைபிடித்து
பரிவோடு வழிநடத்தும் பாலகனைத் தந்திட்டாய்
பாவங்களை தான்சுமந்த புனிதனை பெற்றவளே
விரிகின்ற வான்சுடர் வியக்கும் ஏசுஒளி
விண்ணில் கண்டோம் வேதனைகள் இனிஇல்லையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக