ஞாயிறு, 29 மார்ச், 2015

பரமேஸ்வரா



ஊழிமுதல்வனை உலக நாயகனை
  உயர்ந்த சடையில் உயர்கங்கை தாங்கியவனை
முழுமதியை முறித்து முன்முடியில் தரித்தவனை
  மன்மதனை கண் மூன்றால் எரித்தவனை
நெளியும் நல்அரவை நீலக்கழுத்தில் அணிந்தவனை
  நெற்றியில் சுடலை நீரினைப் பூசியவனை
பழவினை போக்கி பரம்பதம் அளிப்பவனை
  பவித்திர உத்திராட பரமசிவனைப் பணிவேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக