புதன், 25 மார்ச், 2015

ஆற்றுக்கால் பகவதி



அஞ்சாத கண்ணகியே ஆற்றுக்கால் பகவதியானாய்
  அழகான அனந்தபுரம் ஆற்றுக்கிள்ளிக் கரையினிலே
கொஞ்சம் தங்கிட கோலமிகு தேவியானாய்
  கருவறைச் சிலையினிலே கனகரத்தினம் பூண்டிருப்பாய்
அஞ்சும் பூத வடிவபெண்மேலே அழகாக அமர்ந்திருப்பாய்
  ஆதிசங்கரர் யந்திரத்தில் அமைதியாகி சாந்தமானாய்
வஞ்சியுன் கைகளிலே விரிசூலம் கத்திகேடயம்
  வாரித்தரும் அட்சயபாத்திரம் வளம்தர தாங்கியிருப்பாய்
நெஞ்சுருகி பொங்கலிட்டு நங்கையர் கூடிடுவார்

  நலம்தந்து அவர்வாழ நாளும் காத்திருப்பாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக