1. கோதண்டம் தாங்கிய கோசலை
மைந்தனே
கோமகள் சீதையை கைபிடித்த காகுத்தனே
பாதச்சுவடென பின்தொடர்ந்த இலக்குவன் சோதரனே
பணிகின்ற அனுமனின் பாசமிகு தலைவனே
வேதநாயகனே வையமதில் வாழவந்த மனிதநேயமே
வடபனிநிறை இமயமுதல் வற்றாததென் குமரிகடல்வவரை
பாதம்பட நடந்து போர்முடித்த வீரனே
பாதம்பட அகலிகை பாவம்நீக்கிய கருணையே
2. சேதுக் கடல்மேல் சீரணைகட்டிய
சிற்பியே
செந்தாமரை முகத்தோனே சொல்காத்த புத்திரனே
ஒதும் அரசநீதியின் ஒப்பிலா மன்னவனே
ஒங்கும் பாரதமதில் ஒர்ராம ராஜ்யம்
நீதி செழிக்க நிலைபெறச் செய்தவனே
நித்தம் உனைப்பணிய நன்மையே சேருமே
கதிரவன் குலத்தோனே காலடியே சரணாகதியென
கனிந்தே வீழ்ந்தேன் காலமெலாம் காப்பாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக