சனி, 21 மார்ச், 2015

ஆறுமுகம்



ஒங்கார வடிவமாகி வருகின்ற ஒருமுகம்
  ஒதும் ஞான மொழி பேசுகின்ற ஒருமுகம்
பொங்கும் சரவணபவ எனும் ஆறெழுத்தில்
  பக்தர் வினைதீர்க்கும் ஒருமுகம்
தங்கும் ஞான சக்தியினை ஏவி கிரெளஞ்சமலை
  தகர்த்து இன்னருள் தரும் ஒருமுகம்
நீங்கிய பக்திவழி நீசர் சூரரை
  நல்வேலில் அழித்து வீரம்காட்டும் ஒருமுகம்
தங்கிய மான்வயிற்றில் தான் பிறந்த வள்ளியை
  தங்கமனம் கவர்ந்து மணந்தது ஒருமுகம்
எங்கும் நிறைந்து என்மனதில் என்றும்
  ஏறி அமர்ந்த எழில் ஆறுமுகமதைப் பணிவேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக