ஒங்கார வடிவமாகி வருகின்ற ஒருமுகம்
ஒதும் ஞான மொழி பேசுகின்ற ஒருமுகம்
பொங்கும் சரவணபவ எனும் ஆறெழுத்தில்
பக்தர் வினைதீர்க்கும் ஒருமுகம்
தங்கும் ஞான சக்தியினை ஏவி கிரெளஞ்சமலை
தகர்த்து இன்னருள் தரும் ஒருமுகம்
நீங்கிய பக்திவழி நீசர் சூரரை
நல்வேலில் அழித்து வீரம்காட்டும் ஒருமுகம்
தங்கிய மான்வயிற்றில் தான் பிறந்த வள்ளியை
தங்கமனம் கவர்ந்து மணந்தது ஒருமுகம்
எங்கும் நிறைந்து என்மனதில் என்றும்
ஏறி அமர்ந்த எழில் ஆறுமுகமதைப் பணிவேனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக