பக்தனைக் காத்திட பிடரிசூழ் சிம்மமாய்
பெருந்தூண் பிளந்து பீரிட்டெழுந்த நரசிம்மா
முக்தியை முரடனுக்கும் மனமுவந்து அளித்தவா
மோகனப் புன்னகையாள் மூவுலகின் தேவியை
பக்கத்தில் வைத்து பாம்பணையில் அமர்ந்தவா
பாங்குடன் சங்கமும் பளிச்சிடும் சக்கரமும்
போக்கும் கதையும் பூவிழி பாலனும் கூடிநிற்க
பார்க்கும் கண்களில் பரவசம் பெருகுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக