ஒர் ஐந்து முகமும் ஈரைந்து கரங்களும்
ஒளிரும் சக்கரமும் ஒலியெழுப்பும் சங்கமும்
கூர்அறிவும் மனஉறுதியும் கோல எழுத்தாணியும்
குளிர்ந்த முகப்பொலிவு மனத்தூய்மை வழங்கிட
சீர்மிகு தாமரையும் சிலம்பும் செஞ்சாந்தும்
சிங்கார கதையும் சிலிர்க்கும் சாட்டையும்
பார்மீது தாங்கியே பவனிவரும் காயத்திரி
பாவங்களை அறியாமையை போக்கிடும் ஒளியே
நேராக வணங்கிட நேயமிகு கதிரே
நல்லுலகை படைத்திட்ட நலமிகு தெய்வமே
சீராக தியானிப்பேன் சீர்மிகு உன்புகழை
சிந்தையை தெளிவித்து சிற்றறிவை நெறிப்படுத்துவாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக