சத்திய சோதியென சகமெங்கும் ஒளிவீச
சத்ய சாயியென சஞ்சலங்கள் போக்கிடவே
நித்திய தெய்வமாய் நடமாடும் புண்ணியமாய்
நெஞ்சில் அன்பையே நிலையான ஆயுதமாய்
வித்தைகள் புரிந்தாயே விழிப்புணர்வு தந்தாயே
விரித்த குழலோடு விளங்கிய காவியோடு
சித்து விளையாடி சிந்தையில் புகுந்தாயே
சிறுமைதனை விரட்டி சிறகடிக்க வைத்தாயே
புத்தியில பக்தியை புனிதசேவையில் இணைத்தாயே
பூமியில் யாவரும் உடன்பிறந்தார்என உணர்வித்தாய்
முத்திட்டு ஈன்றுவளர்த்த பெற்றோரை கண்முன்
முன்னிற்கும் தெய்வமெனப் பணிய வைத்தாயே
வித்தாக ஒழுக்கமதை விதைத்திட செய்தாயே
வியத்தகு உழைப்பை வேதமாக்கி நின்றாயே
சத்தான கருணையை சக்தியாக்கி வளர்த்தாயே
சூழ்ந்து நின்று என்னை என்றும் வழி நடத்துவாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக