ஞாயிறு, 15 மார்ச், 2015

குன்றமர்ந்த ஞானகுரு



கார்த்திகை நோன்புக்கு கருவான உருவே
  கறுப்புநீல ஆடைக்கு கனிவுதந்த திருவே
மார்கழிநீங்க தையில் மகரசோதியான வரமே
  மலைமேல் அமர்ந்த மாசபரி குருவே
பாரினில் சரணம் பாடிவரும் பக்தர்
  பார்வைக்கு சோதியான பரவசத் தருவே
கோரிக்கை நிறைவாக்கும் குறையற்ற நிறைவே
  குழந்தையாய் தெய்வமாய் குன்றமர்ந்த ஞானகுருவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக