கார்த்திகை நோன்புக்கு கருவான உருவே
கறுப்புநீல ஆடைக்கு கனிவுதந்த திருவே
மார்கழிநீங்க தையில் மகரசோதியான வரமே
மலைமேல் அமர்ந்த மாசபரி குருவே
பாரினில் சரணம் பாடிவரும் பக்தர்
பார்வைக்கு சோதியான பரவசத் தருவே
கோரிக்கை நிறைவாக்கும் குறையற்ற நிறைவே
குழந்தையாய் தெய்வமாய் குன்றமர்ந்த ஞானகுருவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக