தமிழ் கவிதைகள்
ஞாயிறு, 19 ஏப்ரல், 2015
கணபதி
ஏகதந்தம் எழுத்தாணியாகி முன்வர
ஏந்திய கைகளில் கொழுக்கட்டை மணம்வீச
முகமோடு இழைகின்ற துதிக்கை
மூலப் பிரணவமாய் வடிவுகாட்ட
வேகமாய் வீசுகின்ற விசிறியென காதசைய
வேழமுகம் முன்வந்து விளையாட
மோகம் களைந்து முக்திதரும் கணபதியே
முக்காலமும் உன்பாதம் நான் சரணே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக