ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

கணபதி



ஏகதந்தம் எழுத்தாணியாகி முன்வர
  ஏந்திய கைகளில் கொழுக்கட்டை மணம்வீச
முகமோடு இழைகின்ற துதிக்கை
  மூலப் பிரணவமாய் வடிவுகாட்ட
வேகமாய் வீசுகின்ற விசிறியென காதசைய
  வேழமுகம் முன்வந்து விளையாட
மோகம் களைந்து முக்திதரும் கணபதியே
  முக்காலமும் உன்பாதம் நான் சரணே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக