திங்கள், 13 ஏப்ரல், 2015

ஸ்ரீ ஐயப்பன்



எந்தன் வினையெல்லாம் எங்கோ விரட்டிட
  எழுகின்ற பிறைநிலவே எந்தன் ஐயப்பா
தந்தையாக அரனும் தாயாக ஹரியும் செய்
  தவமாக தரணியில் வந்தெழுந்த சுதனே
சொந்தமாக பொன்னம்பல மேட்டினில்
  சுடராக எழுகின்ற மகர சோதியே
பந்தபாசம் நீக்கி நின் பாதங்கள் சரணடைய
  பம்பையில் ஆடும் பாலனே பரிவோடு என்னை ஏற்றருள்க!

3 கருத்துகள்: