ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

பொன்மகளே!



இருகையில் ஏந்திய இனியசெந் தாமரைகள்
  இடக்கரத்தில் பொற்காசு குவளையும் மின்னிட
திருவான வலக்கரமதில் திகழ்கின்ற பொற்கலசமும்
  தகதகக்க தண்ணீராய் தங்கம் வழிந்தோட
மருவிலா கழுத்தினில் மணிப்பொன் ஆரம்அசைய
  மஞ்சுவிரி கூந்தலில் மகுடம் ஒளிவீச
உருவாகி வந்துதித்த உன்னதச் செல்வியே
  உள்ளமதில் தங்கிநின்று உயர்வனைத்தும் அருள்வாயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக